Vedantam Thanda Veera Thuravi Swami Chidbhavananda (Biography in Tamil Part 1 to 3) By Yatiswari Krishnapriya Amba
பெரிய சுவாமிஜி சித்பவானந்தர் அவர்களைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறு 3 பாகங்கள் கொண்ட புத்தகங்களாக திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டுப் பிரிவாகிய ‘ஸ்வாத்யாயா’ வெளியிட்டுள்ளது. பெரிய சுவாமிஜி சித்பவானந்தர் அவர்களிடம் சன்னியாசம் பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள், இந்நூலை எழுதியுள்ளார்.
குருவருளாலும், திருவருளாலும் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் விரிவான வாழ்க்கை வரலாறு மூன்று பாகங்களில், 55 அத்தியாயங்களில், 1728 பக்கங்களில், 300க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன் தயாராகியுள்ளது. இந்நூலை அச்சடிக்கும் பணியின் பூர்வாங்க வேலைகள் குருநாதர் அமரவாழ்வு எய்திய புனித நாளில் – ஐப்பசி மாதம் சுக்ல பட்ச பஞ்சமி – துவக்கப்பட்டன. 6000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு புத்தகம் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் 120வது ஜயந்தி நன்னாள் அன்று (8ஆம் நாள் ஏப்ரல் 2018) இந்த மூன்று பாகங்கள் கொண்ட நூல்கள் வெளியிடப்பட்டன. தற்பொழுது இவை விற்பனையாகி வருகின்றன.